சாணக்கியர் நீதி
‘ சாணக்கியர் ’- என்று சொன்னவுடன் , நம்மில் பலர் மனதில் தோன்றுவது , அவருடைய அவிழ்ந்த குடுமியும் அவர் எடுத்த சபதமும்தான். ‘ பாஞ்சாலி ’ சபதத்திற்குப் பிறகு வரலாற்றுப் பெயர் பெற்ற சபதம் - ‘ சாணக்கிய சபதம் ’ தான். கெளரவ சாம்ராஜ்யத்தை அழித்து , தர்மருடைய ஆட்சியை ஏற்படுத்தியது - பாஞ்சாலி சபதம். நந்தர்களின் ஆட்சியை அழித்து , சந்திரகுப்தரை மன்னராக்கி , குப்தர் பொற்காலத்திற்கு அடிகோலியது - ‘ சாணக்கிய சபதம் ’. சாணக்கியருடைய சபதம் போல் , அவர் எழுதிய ‘ அர்த்த சாஸ்திர ’ மும் உலகப் பிரசித்தி பெற்றவை. அர்த்த சாஸ்திரம் , ஒரு statecraft புத்தகம். அதாவது அராசங்கமும் அரசனும் எப்படி நல்ல ஆட்சி செய்ய வேண்டும் என்பதை விளக்கும் நூல். இது சரித்திரம் படித்த எல்லோருக்கும் தெரிந்த விஷயம். பல பேருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லாத விஷயம் — இதே ...